தமிழக அரசு நடத்தி வருகின்ற அம்மா உணவகத்திற்கு, 50 லட்ச ரூபாயினை நிதியாக அளித்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
தமிழக முதல்வர் மற்றும் பாரதப் பிரதமர் உள்ளிட்டோர், தங்களுடைய நிவாரண நிதிக் கணக்கிற்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள் என, வேண்டுகோள் விடுத்தனர். அதனைத் தொடர்ந்து பலரும், தங்களுடைய உதவிகளை அந்தக் கணக்கிற்கு செய்து வந்தனர். இந்நிலையில், தமிழ் நடிகரும், இயக்குநர் மற்றும் நடன கலைஞருமான ராகவா லாரன்ஸ் மூன்று கோடி ரூபாய் அளவிற்கு உதவிகளை அறிவித்தார்.
அதே போல், தற்பொழுது தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகின்ற அம்மா உணவகத்திற்கு 50 லட்ச ரூபாயினை, நன்கொடையாக கொடுத்துள்ளார். பல முன்னணி நடிகர்களும், உதவி செய்வதற்கு யோசிக்கின்ற நிலையில், இவர் தாராளமாக அள்ளிக் கொடுத்து வருவது, அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகின்றது.