டிரம்ப் பேச்சு குறித்து ராகுல் கருத்து!

23 July 2019 அரசியல்
rahul.jpg

காஷ்மீர் விவகாரத்தில், தான் தலையிட வேண்டும் என மோடி, என்னிடம் கேட்டுக் கொண்டார் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார். இது தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து டிவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பேசுமாறு பிரதமர் மோடி என்னிடம் கேட்டுக் கொண்டார் என, அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இது உண்மை என்றால், 1972ல் ஏற்படுத்தப்பட்ட சிம்லா உடன்படிக்கைக்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கும் மோடி துரோகம் செய்கிறார். பிரதமர் மோடி இது குறித்து மக்களிடம் பேச வேண்டும் எனவும் டிவீட் செய்துள்ளார்.

HOT NEWS