இந்தியாவினை வழிநடத்தும் பிரதமர், வன்முறையினை நம்புகின்றார் என, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவே தற்பொழுது உலகின் கற்பழிப்புத் தலைமையகமாக உள்ளது என்று கூறியுள்ள ராகுல், இதற்கு நம்முடையப் பாடத்திட்டமும் ஒரு காரணமாக உள்ளது. நல்லக் கல்வி அறிவு வழங்கும் பொழுது, இத்தகையப் பெண்களுக்கு எதிரான செயல்கள் நடைபெறாது என்றார்.
மேலும், அவர் பேசுகையில், உன்னாவோ மாவட்டத்தில் நடைபெற்ற கற்பழிப்பு சம்பவத்தில் பாஜக எம்எல்ஏ ஈடுபட்டு உள்ளார். ஆனால், அவரைப் பற்றி ஒரு வார்த்தையாவது நம்முடையப் பிரதமர் பேசியிருக்கின்றாரா, தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பினைப் பற்றி பேசும் அவர், பெண்களுக்கு எதிரான குற்றத்தினைப் பற்றி ஏன் பேசுவதில்லை.
வெளிநாடுகள் ஏன் இந்தியா இன்னும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க மறுக்கின்றது எனக் கேட்கின்றன. உன்னாவோ நகரில் பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் என் மனதை வருத்துகின்றது. நாம் மேலும் ஒரு மகளை இந்த சமுதாயத்தில் இழந்துள்ளோம். என்னுடைய இரங்கலையும், ஆழ்ந்த அனுதாபத்தையும் அந்தப் பெண்ணின் குடும்பத்தாருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.