நீங்கள் வெங்காயம் உண்பதைப் பற்றி யாரும் கேட்கவில்லை. ராகுல் காந்தி பதிலடி!

06 December 2019 அரசியல்
rahulgandhi121.jpg

நீங்கள் என்ன உண்கின்றீர்கள் என்பது பற்றி, யாரும் கேட்கவில்லை என, நிர்மலா சீதாராமனின் பதிலுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ராகுல் காந்தி.

வெங்காய விலை உயர்வைப் பற்றி, நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர். அப்பொழுது, நான் வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டை உண்ணும் குடும்பத்தில் இருந்து வரவில்லை என, நிர்மலா சீதாராமன் கூறினார்.

இதனையடுத்து, பெரிய அளவில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். நிர்மலாசீதாராமனின் பதிலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான ராகுல் காந்தி பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், நிதியமைச்சர் என்ன உண்கின்றார் என யாரும் கேள்வி கேட்கவில்லை. நாங்கள் ஏன் இந்த விலை உயர்வுக்கு காரணம், பொருளாதார மந்த நிலைக்கு காரணம் பற்றியேக் கேள்வி எழுப்பினோம். ஆனால், நீங்கள் வேறொரு பதிலை தருகின்றீர்கள்.

இந்தியாவின் மிக முக்கியமான வலிமையே நம்முடையப் பொருளாதாரம் தான். அதனை, பிரதமர் மோடி சிதைத்து விட்டார். நாம் மக்களின் பேச்சைக் கேட்கின்றோம். அவரோ, அவர் பேச்சை மட்டுமே நம்புகின்றார். அவர் என்றாவது, ஒரு கடைக்குச் சென்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பினைப் பற்றி கேட்டுள்ளாரா என வினவினார்.

HOT NEWS