ப சிதம்பரத்தை சந்தித்த ப்ரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி!

27 November 2019 அரசியல்
rahulpriyanka.jpg

இன்று காலையில், திஹார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தினை, காங்கிரஸ் கட்சியின் ப்ரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்து பேசினர்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ஆகஸ்ட் 21ம் தேதி அன்று, சிபிஐயால் கைது செய்யப்பட்ட ப சிதம்பரம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அதிலிருந்து 99 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் அவர் திஹார் சிறையிலேயே இருக்கின்றார்.

சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தப் போதிலும், அமலாக்கத்துறை வழக்கானது நிலுவையில் உள்ளதால், அவர் சிறையில் இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டார். தொடர்ந்து, அவரை காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.

இந்நிலையில், இன்று காலையில், ப்ரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்து உள்ளனர். இன்று, ப சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS