ஜார்கண்டில் 10,000 பேர் மீது தேசதுரோக வழக்கு! ராகுல் குற்றச்சாட்டு!

21 November 2019 அரசியல்
rahulamethi.jpg

ஜார்கண்ட் மாநிலத்தில், 10,000 பேர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, அடக்குமுறையை எதிர்த்துப் போராடும், பழங்குடியின மக்கள் மீது, ஜார்கண்ட் அரசாங்கம் தேசத் துரோக வழக்கினைப் பதிவு செய்துள்ளனர்.

இது பற்றி, எவ்வித ஊடகமும் சிறிய அளவிலான செய்தியினைக் கூட வெளியிடவில்லை. டிவி சேனல்களும் மவுனம் காக்கின்றன. இது தான் ஊடக தர்மமா என கேள்வியும் எழுப்பி உள்ளார்.

HOT NEWS