மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களிலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒரு சிலர், தங்களுடைய ராஜினாமா கடிதத்தினை சபாநாயகரிடம் அளித்துள்ளனர். மேலும், அவர்கள் பாஜகவில் இணையும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகின்றது இந்நிலையில், குஜராத்தில் 73 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கின்றனர். அவர்களில், நான்கு பேர் தங்களுடைய ராஜினாமா கடிதத்தினை சபாநாயகரிடம் அளித்துள்ளனர்.
அவர்களுடன் சேர்த்து, சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன், மாநிலங்களவைக்கு இரண்டு எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட இருந்த நிலையில், இது நடைபெற்றுள்ளது. மேலும், அக்கட்சியில் இருந்து, பாஜகவிற்கு மாற முயன்ற 14 எம்எல்ஏக்கள் தற்பொழுது ஜெய்ப்பூர் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். இது தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.