மீண்டும் பவருக்கு வந்த ராஜேந்திர பாலாஜி! இன்று முதல் பொறுப்பு!

03 July 2020 அரசியல்
rajendrabalaji.jpg

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, விருதுநகர் மாவட்டக் கழகச் செயலாளராக இருந்து நீக்கப்பட்ட ராஜந்திர பாலாஜி, தற்பொழுது மீண்டும் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

தொடர்ந்து அநாகரீகப் பேச்சு மற்றும் எதிர் கட்சியினரைத் தரக்குறைவாகப் பேசி வந்ததன் விளைவாக, தமிழகப் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதனிடையே, இன்று அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத் துணைமுதல்வருமான ஓபன்னீர்செல்வமும், அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்தின் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டனர்.

அதில், விருதுநகர் மாவட்டத்தின் புதிய கழகச் செயலாளர் நியமிக்கப்படும் வரை, ராஜேந்திரப் பாலாஜியே பொறுப்பாளராக நியமிக்கப்படுகின்றார் என்றும், கழக உடன்பிறப்புகள் இவருக்கு, முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

HOT NEWS