அந்த பன்னி வந்தா சுட்டுருங்க! ராஜேந்திர பாலாஜி பேச்சு!

24 September 2019 அரசியல்
rajendrabalaji.jpg

அந்த பன்னி வந்தா சுட்டுருங்க என, தமிழக அமைச்சர் திரு ராஜேந்திர பாலாஜி மேடையில் பேசியுள்ளார். அந்த வீடியோ, தற்பொழுது வைரலாகி வருகிறது.

தமிழக பால் வளத்துறை அமைச்சர் திரு ராஜேந்திர பாலாஜி அவர்கள் கடந்த சில காலங்களாக, எதிர் அணியினரைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துக்குவான் என, ஜாடை மாடையாக மோடியைப் புகழ்ந்து தள்ளினார். இந்நிலையில், தற்பொழுது புதிய வெடியைக் கொளுத்திப் போட்டுள்ளார்.

சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற ராஜேந்திர பாலாஜி, அந்தத் தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில், விருதுநகர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. மாணிக் தாகூரை, பன்னி என்றுத் திட்டியுள்ளார்.

அவர் பேசுகையில், மாணிக் தாகூர் ஓட்டு கேட்டு வந்தால், செருப்பு கழற்றி அடிங்க. ஓட்டு கேட்டும் வரலை, நன்றி சொல்லவும் வரலை. டெல்லியில் உட்கார்ந்துட்டு இருக்கான். பொண்டாட்டி புள்ள எல்லாம் டெல்லியில இருக்காங்க. பன்னிப் பையன் டெல்லியில உட்கார்ந்துட்டு அறிக்கை கொடுத்துட்டு இருக்கான். பன்னி இங்க வந்தா சுட்டுடுங்க. ரப்பர் குண்டு வச்சு, வயித்துல ரெண்டு அடி அடிங்க.

ஒரு அமைச்சரின் இத்தகையப் பேச்சு, கண்டிக்கத்தக்கது என, சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

HOT NEWS