தமிழகம் முழுவதும் தற்பொழுது கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனை முன்னிட்டு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், இலவச முகமூடிகள் உள்ளிட்ட பல விழிப்புணர்வு விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவருடைய ரசிகர்களும், மக்களிடத்தில் நல்ல பெயரை பெற வேண்டும் என தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில், ரஜினி மக்கள் மன்றத்தினைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர், பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தினை செய்து வருகின்றனர். இன்று மாலை(24-03-2020) ஆறு மணி முதல், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வர உள்ள நிலையில், கொரோனா விழிப்புணர்வு குறித்தும், வதந்திகள் குறித்தும் பொதுமக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.