தொடர்ந்து மலுப்பலான பதிவுகளை வெளியிடும் ரஜினிகாந்த்! வலுக்கும் எதிர்ப்புகள்!

20 December 2019 அரசியல்
rajinikanthdoordarshan.jpg

இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய கருத்தினை, தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கின் மூலம் தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம், ஒரு வழி ஆகி விடக் கூடாது. தேசப் பாதுகாப்பு மற்றும் நாட்டின் நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் போராட்டங்களைப் பற்றிப் பேசாமல், வன்முறை மற்றும் கலவரங்களைப் பற்றி மட்டும் ரஜினிகாந்த் கூறியுள்ளார் எனப் பலரும், தற்பொழுது சமூக வலைதளங்களில் ரஜினிகாந்திற்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர்.

HOT NEWS