ஆரோக்யம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு ரஜினி கருத்து!

10 June 2020 அரசியல்
rajinipressmeet.jpg

கொரோனாவால் தொடர்ந்து பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பல நலத்திட்ட உதவிகளை, ஏழை எளிய மக்களுக்கு செய்து வருகின்றனர். அதற்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புதிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இடைவிடாமல் உதவிகளைச் செய்துக் கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடிபட்ட உடனேயே அதிக வலி தெரியாது. இப்போது நமக்குப் பட்டிருக்கும் கரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல, வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத் தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போலத் தெரிகிறது. இதனுடைய வலி வருங்காலங்களில் பல விதங்களில் நமக்குப் பல கடுமையான வேதனைகளைத் தரும்.

உங்களது குடும்பத்தாரின் எல்லா தேவைகளையும் பூர்த்திச் செய்து அவர்களைப் பாதுகாப்பது தான் உங்களது அடிப்படை கடமை. எந்தச் சூழலிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசத்தை அணியாமலும் இருக்காதீர்கள், என ரஜினிகாந்த் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

HOT NEWS