உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது என, ரஜினி மக்கள் மன்றம் சார்பில், அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
இது குறித்து வெளியாகி உள்ள அறிக்கையில், தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், நமது அன்புத் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை.
ஆகையால், யாரும் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரிலோ, ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரிலோ மன்றத்தின் கொடியோ, தலைவரின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.