மத்திய உள்துறையின் தோல்வியினை இந்த டெல்லிக் கலவரம் காட்டுகின்றது என, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார்.
நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், டெல்லியில் நடைபெற்று வரும் கலவரம் குறித்து பேட்டியளித்தார். அவர் பேசுகையில், டெல்லியில் நடைபெற்று வரும் கலவரம் உள்துறையின் தோல்வியினைக் காட்டுகின்றது. இந்த விஷயத்தில், மத்திய அரசினை வன்மையாகக் கண்டிக்கின்றேன். உளவுத்துறை சரிபட செயல்படவில்லை. உளவுத்துறையின் தோல்வியானது, உள்துறையின் தோல்வி தான்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் பொழுது இப்படி நடைபெற்று உள்ளது. எவ்வளவு ஜாக்கிரதையாக நாம் இருந்திருக்க வேண்டும்? இரும்புக் கரம் கொண்டு, அந்த கலவரத்தினை அடக்கி இருக்க வேண்டும். மதத்தின் பெயரால் அரசியல் செய்வது தவறு. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
ஊடக நண்பர்கள், உண்மையை மட்டும் எழுதுங்கள். குறிப்பாக, மூத்த பத்திரிக்கையாளர்கள் கவனமாக செய்திகளை வெளியிட வேண்டும். என்னைப் பொருத்த வரையில், இந்த சிஏஏ மற்றும் தேசிய குடியுரிமைத் திருத்த சட்டத்தினை, மத்திய அரசுப் பின்வாங்காது எனத் தோன்றுகின்றது. அதனால், இதற்காகப் போராடுவது வீண் எனவும் கூறினார். இதற்கு கமல் ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து கமல் வெளியிட்டுள்ள டிவீட்டில், சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே! அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல. ஒரு இனமே நடக்கும் ராஜபாட்டை. வருக, வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.
சபாஷ் நண்பர் @rajinikanth அவர்களே, அப்படி வாங்க.
— Kamal Haasan (@ikamalhaasan) February 26, 2020
இந்த வழி நல்ல வழி.
தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை.
வருக, வாழ்த்துக்கள்.