நாளை கட்சி அறிவிப்பினை வெளியிடுகின்றார் ரஜினிகாந்த்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

11 March 2020 அரசியல்
rajnimakkalmandram.jpg

நாளை தன்னுடைய அனைத்து மாவட்ட செயலாளர்களையும், சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வர அழைத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இன்று காலையில், சென்னையில் இருந்து தன்னுடைய மக்கள் மன்ற உயர் அதிகாரிகளுக்கும், செயல் தலைவர்களுக்கும் புதிய கட்டளை ஒன்றினை ரஜினிகாந்த் பிறப்பித்துள்ளார். அதில், நாளை காலை எட்டு மணிக்கு, ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வர வேண்டும் என கூறியுள்ளாராம். இதனால், அவர் தன்னுடையக் கட்சியினைக் குறித்த அதகாரப்பூர்வத் தகவலை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், அவர் தன்னுடைய முதல் கட்சி மாநாடு குறித்து அறிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றார். இருப்பினும், இது குறித்து ரஜினியின் தரப்பில் இருந்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை. கடந்த 5ம் தேதி அன்று, மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்த ரஜினி, தனக்கு ஏமாற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நாளை மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கூட்டம் நடைபெற உள்ளது.

HOT NEWS