இந்தியாவின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம்! அமைச்சர் அதிர்ச்சித் தகவல்!

28 September 2019 அரசியல்
rajnathsingh.jpg

இந்தியாவின் கடலோர எல்லைகள் மீது, பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு இருப்பதாக, உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

கேரளாவில் உள்ள மாதா அமிர்தானந்தமாயியின், 66வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜ்நாத் சிங், நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் பேசினார். அவர் பேசும் பொழுது, நான் உள்துறை அமைச்சராக இருந்த பொழுது தான் புல்வாமா தாக்குதல் நடைபெற்றது. அதனை என்றும் மறக்க முடியாது.

வீரர்களின் தியாகத்தை, அனைவரும் மதிக்க வேண்டும். அவர்களும், அவர்களுடையப் பெற்றோர்களும் பெரிய தியாகத்தினை செய்துள்ளனர். அவர்கள் (வீரர்களின்) தியாகத்தை மதிக்காத அரசை, உலகம் மதிக்காது. புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பிறகு, பாகிஸ்தானில் உள்ள பால்கோட் பகுதியில் நம்முடைய விமானப்படை, தாக்குதல் நடத்தி, அங்கிருந்த தீவிரவாதிகளை அழித்தது. நாம் யாரையும் தொந்தரவு செய்யமாட்டோம். நம்மை தொந்தரவு செய்தவர்களை சும்மா விடமாட்டோம்.

நம் நாட்டின் கடற்பகுதியின் மூலம், இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த, பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் மூலம் ஆபத்து இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், அதே சமயம், இந்தியக் கடற்படை அனைத்திற்கும் தயாராகவே உள்ளது. தொடர்ந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எத்தகைய எதிர்ப்பு வந்தாலும், சமாளிக்க முடியும் என அவர் கூறினார்.

HOT NEWS