மத்தியப் பிரதேச சபாநாயகரும், பாஜக மூத்த தலைவருமான ராமேஷ்வர சர்மா அதிரடி கருத்து ஒன்றினைத் தெரிவித்து உள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, ருத்ர தாண்டவம் ஆடி வருகின்றது. இதனால், ஒன்றே முக்கால் கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்த வைரஸானது, நாளுக்கு நாள் மிக மோசமாகப் பரவி வருகின்றது. இதனால், பல ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதி அன்று உத்திரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில், ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற உள்ளது. இதில், பாரதப் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். இதற்கான வேலைகள் தற்பொழுது, துரித கதியில் நடைபெற்று வருகின்றது. இது குறித்துப் பலரும் பலவிதக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, தற்பொழுது மத்தியப் பிரதேச மாநிலத்தின் சபாநாயகரும், பாஜகவின் மூத்த அரசியல் தலைவருமான ராமேஷ்வர சர்மா நேற்று நடைபெற்றக் கூடத்தில் அதிரடிக் கருத்து ஒன்றினைத் தெரிவித்து உள்ளார். அவர் அங்கு நடைபெற்றக் கூட்டதில் பேசுகையில், இராமர் கொரோனாவினை அழித்துவிடுவார் என்றார். ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் பொழுது, உலகெங்கிலும் குறிப்பாக இந்தியாவில் கொரோனாவினை எதிர்த்து இராமர் களமிறங்குவார்.
அன்று அசுரர்களை அழிப்பதற்காக, இராமர் அவதாரம் எடுத்தார். அதே போல், தற்பொழுது மனிதர்களை காக்கும் பொருட்டு, கொரோனாவினை அழிப்பார் என்றுக் கூறியுள்ளார். இது தற்பொழுது வைரலாகி உள்ளது.