மும்பையில், விரைவில் கொரோனா வைரஸிற்காக பிரத்யேகமாக மருத்துவமனை உருவாக்கப்படும் என, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானியின் ஆர்ஐஎல் குழுமமானது, இந்த அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த மருத்துவமனையின் மூலம், ஒரு நாளைக்கு ஒரு லட்சம் முகமூடிகளை தயாரித்து வழங்கவும் முடிவு செய்துள்ளனர்.
இன்னும் இரண்டு வாரங்களில், இந்த மருத்துவமனை உருவாக்கப்படும் எனவும், முற்கட்டமாக 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும், அது விரைவில் அதிகரிக்கப்படும் எனவும் அந்த நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.