போலி விசா! மாட்டிக் கொண்ட ரொனால்டினோ! பராகுவேயில் கைது!

09 April 2020 அரசியல்
ronaldinho.jpg

போலியான விசா மூலம், பராகுவே நாட்டிற்குள் நுழைய முயன்ற கால்பந்து நட்சத்திரம் ரொனால்டினோ, அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

பிரேசில் நாட்டின் முன்னாள் கால்பந்து வீரரும், பார்சிலோனா அணியின் முன்னாள் நட்சத்திரக் கால்பந்து வீரருமான ரொனால்டினோ, அவருடய சகோதரருடன் இணைந்து பராகுவே நாட்டிற்குச் சென்றனர். அங்கு, விமான நிலைய அதிகாரிகளின் சோதனையில், அவர் போலி விசா மூலம் நாட்டிற்குள் நுழைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால், அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கடந்த மாதம் கைது செய்யப்பட்ட நிலையில், தற்பொழுது அவருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது. சுமார், 61.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஜாமீன் தொகையாகக் கட்டியுள்ளாராம் ரொனால்டினோ.

அதனைத் தொடர்ந்து, அவர் தங்கியிருக்கும் ஓட்டலில் அவர் தங்கியிருக்க வேண்டும் எனவும், அதுவே அவருக்கான வீட்டுக் காவல் எனவும் நீதிபதி தீர்ப்பளித்துவிட்டார். இதனால், அவருடைய ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

HOT NEWS