இந்தியாவிற்கும் உலக வல்லரசுகளில் முக்கியமானதாகப் பார்க்கப்படும், ரஷ்யாவிற்கும் இடையில் பந்நெடுங்காலமாக நல்ல உறவு நிலை நீடித்து வருகின்றது. இந்தியா தனக்குத் தேவையான போர் விமானங்களை ரஷ்யாவில் இருந்துப் பெறுவதற்கு, முக்கிய ஒப்பந்தங்களை ஏற்கனவே செய்திருந்தது.
இந்த சூழ்நிலையில், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், தற்பொழுது போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளதால், இந்தியாவின் பலமானது அதிகரிக்கப்பட வேண்டி உள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவிற்கு வழங்க வேண்டியிருக்கின்ற 33 போர் விமானங்களை அதிவிரைவில் வழங்க, ரஷ்யா முடிவு செய்துள்ளது. இந்திய விமானப் படையானது, ரஷ்யாவிடம் இருந்து 12 சுகோய் போர் விமானங்களும், 21 மிக் போர் விமானங்களையும் வாங்க முடிவு செய்திருந்தது.
இதற்கான ஒப்பந்தங்கள், ஏற்கனவே வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, பணமும் செலுத்தப்பட்டு உள்ளது. இதனை, தற்பொழுது விரைவில் இந்தியாவிற்கு வழங்கி, இந்த விமானங்களை இந்திய விமானப் படையில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, ரஷ்யா தெரிவித்துள்ளது.