சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளுக்கான திரைப்பட விநியோகஸ்தர்கள் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும், அருள்பதி தலைமையில் ஒரு அணியும் தேர்தலில் போட்டியிட்டு உள்ளனர். அவர்களுக்கு வாக்களிப்பதற்காக பலரும் வந்திருந்தனர். அப்பொழுது, விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் வந்திருந்தார். அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
மாணவர்கள் இந்த சமூகத்தில் ஒரு அங்கம். அவங்க தான் எதிர்காலத்தில் வரப் போகின்றார்கள். அவர்கள் போராடுவது ஒன்றும் தவறில்லையே. தவறை எதிர்த்து யார் வேண்டும் என்றாலும் போராடலாம். யாருக்கு வேண்டும் என்றாலும், அவர்கள் அழைப்பு விடுக்கலாம். கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாததும் அவரவர் இஷ்டம். விஜய் தற்பொழுது சூட்டிங் சென்றுள்ளதால், அவர் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.