தமிழகத்தில் சலூன் கடைகளைத் திறக்க, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, மே 31ம் தேதி வரை அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளைத் தவிரத்து மற்ற விஷயங்களுக்காக வெளியில் வரக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், இந்த ஊரடங்கில் பலவித தளர்வுகளை அறிவித்து வருகின்றது.
இன்று (23-05-2020) முதல், கட்டுப்பாடுகளுடன் ஆட்டோக்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக சலூன் கடை உரிமையாளர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை காவல்துறைக்கு உட்பட்ட பகுதியினைத் தவிர்த்து, மற்றப் பகுதிகளில் சலூன் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்த நிலையில், தற்பொழுது பிறப் பகுதிகளிலும், அனுமித வழங்கப்பட்டு உள்ளது. காலை ஏழு மணி முதல் இரவு ஏழு மணி வரை, இந்த கடைகளை திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.