சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள், தற்பொழுது பாஜகவில் இணைந்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ், மற்றும் பொன். இராதகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில், பலரும் தங்களை பாஜகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அதில், சந்தக் கடத்தல் வீரப்பனின் மகள், வித்யாராணி முரளிதர ராவ்வின் முன்னிலையில், பாஜகவில் இணைந்தார்.