என் மகன் தேசத்திற்காக வீரமரணம் அடைந்துள்ளான் என, சந்தோஷ் பாபுவின் தாய் கூறியுள்ளார்.
கடந்த ஜூன் 15ம் தேதி அன்று, இந்தியாவின் இராணுவ வீரர்கள் மீது சீன இராணுவம் கடுமையானத் தாக்குதலினை நடத்தியது. இந்த தாக்குதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களுடைய உடலானது, தற்பொழுது நல்லடக்கம் செய்யப்பட்டு உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் சூர்யாபேட்டையை சேர்ந்த இராணுவ அதிகாரி கர்னல் சந்தோஷ் பாபு வீரமரணம் அடைந்தார். இது குறித்து செய்தியாளர்களின் பதிலுக்குக் கேள்வி அளித்த அவரின் தாய், என் மகள் நாட்டின் பாதுகாப்பிற்காக தன்னுடைய உயிரினைத் தியாகம் செய்துள்ளான். இது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. அதே சமயம், அவன் ஒரே மகன் ஆவான். அவன் என்னை விட்டுப் பிரிந்துள்ளது மிகவும் வேதனையாக உள்ளது எனக் கண்ணீருடன் பேசியுள்ளார்.
இன்று அவருடைய உடலானது, இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தன்னுடைய மரியாதையினை அந்த வீரருக்கு செய்தார்.