பெங்களூரில் உள்ள பரப்பனா அக்ரஹாரா சிறையில், சசிகலா இருக்கின்றார். வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் தற்பொழுது தண்டனை அனுபவித்து வருகின்றார்.
அவருக்கு தண்டனைக் காலம் முடிவடைய உள்ளது. இருப்பினும், அவர் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே, சிறையில் இருந்து, நன்னடத்தை விதிகளின் அடிப்படையில், விடுதலை செய்யப்படுவார் என்ற செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில், அவரை நன்னடத்தை விதியில் விடுதலை செய்ய இயலாது என, கர்நாடக சிறைத்துறை இயக்குநர் மெக்ரித் விளக்கம் அளித்துள்ளார். இதனால், அவர் சிறைத் தண்டனை முழுவதையும் அனுபவித்தப் பின்னர் தான் வெளியில் வர இயலும்.