ஆகஸ்ட்டில் சசிகலா விடுதலை? சிறை நிர்வாகம் பதில்!

26 June 2020 அரசியல்
sasikala.jpg

ஆகஸ்ட் 14ம் தேதி அன்று, சசிகலா சிறையில் இருந்து வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக, பாஜகவினைச் சேர்ந்த ஆசிர்வாதம் ஆச்சாரி தெரிவித்துள்ளார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில், இரண்டாவது குற்றவாளியாக கைது செய்யப்பட்ட சசிகலா தற்பொழுது பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருடையத் தண்டனைக் காலம் முடிய உள்ள நிலையில், அவர் சிறையில் வேலை செய்த காரணத்தாலும், நன்னடத்தைக் காரணத்தாலும் விரைவில் அவர் வெளியாவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

இந்த சூழ்நிலையில், பாஜகவினைச் சேர்ந்த ஆசிர்வாதம் ஆச்சாரி என்பவர் தன்னுடைய டிவிட்டரில், புதிய தகவல் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில், பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா வருகின்ற ஆகஸ்ட் 14ம் தேதி அன்று வெளியில் வருவார் எனக் குறிப்பிட்டுள்ளார். இது தற்பொழுது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

இதே சமயம், எப்பொழுது சசிகலா சிறையில் இருந்து வருவார் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள பரப்பன அக்ரஹார சிறை, அது குறித்து எங்களுக்குத் தெரியாது என்றுக் கூறியுள்ளது. இந்த செய்தி, தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS