என் சகோதரரின் பின் பகுதி அப்படியே இல்லை! போலீசார் வெறிச்செயல்!

25 June 2020 அரசியல்
sathankulamlockup.jpg

என் சகோதரரின் பின் பகுதியானது, முழுமையான இல்லவே இல்லை, என, மரணமடைந்த பென்னிக்ஸின் சகோதரர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

கடந்த 19ம் தேதி அன்று, தூத்துக்குடி சாத்தான்குளம் பகுதியில் உள்ள காமராஜர் சாலையில், செல்போன் கடை வைத்திருக்கும் பென்னிக்ஸ் என்பவருக்கும், அப்பகுதி போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. பென்னிக்ஸின் தந்தையினை போலீசார் அடித்ததாகவும், பின்னர் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகின்றது. அதற்கு ஏன் என் தந்தையை இப்படிச் செய்கின்றீர்கள் என பென்னிக்ஸ் கேட்டுள்ளார்.

அதற்கு, நீயும் வா என காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சூழ்நிலையில், அங்கு, அவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால், பென்னிக்ஸ் நெஞ்சுவலி காரணமாக, நேற்று முன் தினம் மரணமடைந்தார். அதே போல், நேற்று காலையில், பென்னிக்ஸ்ன் தந்தை ஜெயராஜ் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

இதனால், அந்த காவல் நிலையத்தினைச் சேர்ந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஜெயராஜ்ஜின் குடும்பத்தினர் வற்புறுத்தினர். இது குறித்து விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன்வந்தது. இந்த வழக்கு குறித்து ஆஜராக, டிஜிபிக்கு உத்தரவிட்டது. இந்த சூழ்நிலையில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடல்களுக்கு பிரதேப் பரிசோதனை செய்யப்பட்டது.

அதற்கு முன், அவர்களின் உடல்களை அவர்களுடையக் குடும்பத்தார் என்று சோதித்துப் பார்த்துள்ளனர். அதில், இருவரின் உடல்களிலும் பின்பக்கம் கடுமையாக சேதமடைந்து உள்ளது. ஆசனவாயில், லத்தியினை விட்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர். மேலும், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ள அவர்களின் உடல்களை கட்டாயம் வாங்கிச் செல்ல வேண்டும் என, எங்கள் குடும்பத்தினரை பிடித்து வைத்துக் கொண்டு வற்புறுத்துகின்றனர்.

முதல்வர் தான், இந்த சம்பவத்திற்கு சரியான முடிவினை எடுக்க வேண்டும். அவர்களின் மீது எப்ஐஆர் பதிவு செய்யும் வரை, கண்டிப்பாக எங்கள் குடும்பத்தாரின் உடல்களை பெறப்போவதில்லை எனக் கூறியுள்ளனர்.

HOT NEWS