ரஜினிகாந்திற்கு கேள்வி விடுத்துள்ள சீமான்! கருத்துக்கு கடும் கண்டனம்!

20 December 2019
seeman.jpg

இந்திய அளவில் தற்பொழுது நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய கருத்தினை டிவிட்டரில் பதிவிட்டார். அதற்குத் தற்பொழுது சீமான் தன்னுடைய கண்டனத்தினைப் பதிவு செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய டிவிட்டர் பதிவில், எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம், ஒரு வழி ஆகி விடக் கூடாது. தேசப் பாதுகாப்பு மற்றும் நாட்டின் நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலடி தரும் விதமாக, தன்னுடைய டிவிட்டர் பதிவில் பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாதுதான்! வன்முறை செய்தது யார்? குடியுரிமைச் சட்டத்திருத்தம் பற்றிய‌ உங்களது கருத்தென்ன? ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அதைச் சொல்லுங்கள் முதலில்! அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது! என சீமான் டிவீட் செய்துள்ளார்.

ரஜினிகாந்தின் பதிவிற்கு தமிழகத்தினைச் சேர்ந்தப் பலரும், தங்களுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். ரஜினிக்கு எதிராக ஹேஸ்டேக்கும் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS