வட இந்தியர்களை தமிழ் கற்றுக் கொள்ளச் சொல்லுங்கள்! இந்தியா ஒற்றுமையாக இருக்கும்! சீமான் விளாசல்!

14 September 2019 அரசியல்
seemanlatest.jpg

அமித் ஷாவின் சர்ச்சைக்குரிய பேச்சால் தற்பொழுது, தமிழக அரசியல்வாதிகளும், நெட்டிசன்களும் கொந்தளிப்பில் உள்ளனர். அவர்களில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களும் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்தி தினமான இன்று பேசிய அமித் ஷா, பல மொழிகளைக் கொண்ட நம் இந்தியா நாடு, உலக நாடுகளின் முன்னிலையில் ஹிந்தியை பயன்படுத்துவது குறித்த விதமாக ஒரு ட்வீட் செய்திருந்தார். இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உட்பட, பல தலைவர்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் தன்னுடைய பதிவில், இந்தியா ஒரே நாடாக இருக்க வேண்டுமென்றால் விந்தியத்திற்கு வடக்கேயுள்ளவர்கள் தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவின் தலைமை மொழி தமிழ்தான் என்று ‘தேசப்பிதா’ காந்தியடிகள் கூறியிருப்பது உள்துறை அமைச்சர் ஐயா அமித்ஷாவுக்கு தெரியாதா? என பதிவிட்டுள்ளார்.

HOT NEWS