கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவிற்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கடந்த வாரம், செல்லூர் ராஜூவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, அவருடன் தொடர்பில் இருந்த அனைவரிடமும் கொரோனா தொற்று சோதனை நடைபெற்றது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
அதில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவிற்கு கொரோனா தொற்று இருப்பது தற்பொழுது உறுதியாகி உள்ளது. இதனால், அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் தற்பொழுது நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப ஓ பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட முகஸ்டாலின், அவர் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் மின்வாரியத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ள நிலையில், தற்பொழுது செல்லூர் ராஜூவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.