கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவி ஜெயந்திக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்.
தமிழகம் முழுக்க கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. சென்னையை அடுத்து, மதுரையில் கொரோனா வைரஸ் பாதிப்பானது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால், அங்கு ஊரடங்கானது கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மதுரை மேற்குத் தொகுதி எம்எல்ஏவும், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் ராஜூவின் மனைவி, ஜெயந்திக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு கொரோனா தொற்று இருப்பதை அடுத்து, இவருடைய கணவர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று இருக்கின்றதா என, பரிசோதனை செய்யப்பட்டது. அதில், இவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.