நடைமேடையில் இறந்த பெண்ணின் குழந்தைகளுக்கு ஷாரூக் உதவி!

04 June 2020 அரசியல்
meerfoundation.jpg

நடைமேடையில் இறந்து கிடந்த பெண்ணின் குழந்தைகளுக்கு, தற்பொழுது நடிகர் ஷாரூக் கான் உதவி செய்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, வருகின்ற ஜூன் 30ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவானது அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், பலரும் தற்பொழுது பொதுமக்கள் வெளியில் நடமாடக் கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் தொடங்கி பல லட்சம் பேர் தொடர்ந்து நடந்தே தங்களுடைய சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை மத்திய அரசு இயக்க ஆரம்பித்துள்ளது. இதனால், பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக அந்த ரயில்களில் குவிந்தனர். இந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில் மேடையில் ஒரு பெண் இறந்து கிடந்த வீடியோவானது, சமூக வலைதளங்களில் வைரலானது.

அதில் இறந்த கிடந்த பெண்ணை, அவருடைய குழந்தைகள் எழுப்பின. இது பார்த்தவர்களின் மனதை கரைய வைக்கும் விஷயமாக இருந்தது. இந்நிலையில், அந்த குழந்தைகளை தன்னுடைய அறக்கட்டளை மூலம், அடையாளம் கண்டுபிடித்துள்ளார் நடிகர் ஷாரூக் கான். தன்னுடைய மீர் அறக்கட்டளை மூலம் அந்தக் குழந்தைகளுக்கு உதவி செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

எனக்கு அந்தக் குழந்தைகளின் வலி புரியும். அந்தக் குழந்தைகளின் மனம் தேறிவருவதற்கு, இறைவனை வேண்டிக் கொள்கின்றேன். அக்குழந்தைகளுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் மீர் அறக்கட்டளை செய்யும். அந்தக் குழந்தையைக் கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் நன்றி என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

HOT NEWS