ஐந்து ஆண்டுகள் நிலைக்கும் அரசை அமைக்கும் பணிகள் தீவிரம்! சரத்பவார் பேட்டி!

15 November 2019 அரசியல்
sharadpawar.jpg

மஹாராஷ்டிராவில் தற்பொழுது குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ள நிலையில், சிவசேனா கட்சியினர் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து, இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், ஐந்து ஆண்டுகள் நிலைத்து நிற்கும் அரசினை உருவாக்கும் பணிகள், தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் நல்ல ஆட்சி மஹாராஷ்டிராவில் அமையும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தையானது நடைபெற்று வருகின்றது. ஆட்சி அமைப்பதற்கான பணிகள் தற்பொழுது, முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. நாம் அமைக்கும் ஆட்சியானது, ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் வகையில் இருக்கும். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இரண்டுமே, மதச்சார்பின்மையை மதிப்பவை.

இது குறித்துப் பேசிய சிவசேனா கட்சியின் ராவத், மஹாராஷ்டிராவிற்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு, சிவசேனாவில் இருந்து முதலமைச்சர் வேண்டும். மேலும், எங்கள் கட்சியில் இருந்தே முதலமைச்சர் வர வேண்டும்.

HOT NEWS