இனி ஆபாசப் படம் பார்த்தாலும் கைது! ரவி ஐபிஎஸ் அதிரடி!

24 March 2020 அரசியல்
raviips.jpg

இனி ஆபாசப் படம் பார்த்தாலும் கைது என, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குற்றப்பிரிவு ஏடிஜிபியான டாக்டர் ரவி ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.

பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அவர் அளித்துள்ளப் பேட்டியில், வாட்ஸ் ஆப் குரூப்களில், ஆபாசப் படத்தினைப் பலரும் ஷேர் செய்கின்றனர். அப்படிப்பட்ட குரூப்களில் இருப்பது சட்டப்படி தவறான விஷயமாகும். அந்த குரூப்பின் அட்மின் மற்றும் அந்தக் குரூப்பில் இருப்பவர்களும் குற்றவாளிகள் தான். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலும்.

அதே போல், தற்பொழுது வரை 12 பேர் குழந்தைகள் ஆபாசப் படம் தொடர்பாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில், ஒருவர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு உள்ளார். பலர் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்குச் சென்றுவிட்டனர். இந்நிலையில், தற்பொழுது 1000 பேர் கொண்ட பட்டியலை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றோம்.

ஷேர் செய்யப்படும் ஆபாசப் படங்களை பார்ப்பதும், அதனை டவுன்லோட் செய்வதும், அப்லோட் செய்வதும் சட்டப்படி குற்றம் தான் என அவர் தெரிவித்தார். இந்த்த சட்டத் திட்டங்களின் படி, ஆபாசப் படங்களை ஆன்லைனில் பார்ப்பது குற்றமல்லை. ஆனால், அவைகளை ஷேர் செய்வது, பதிவேற்றம் செய்வது முதலியவை சட்டப்படிக் குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS