பாஜக கூட்டணியில் இருந்து பிரியும் சிவசேனா! சிவ சேனா எம்பி பதவியை ராஜினாமா செய்கின்றார்!

11 November 2019 அரசியல்
shivsena4.jpg

பாஜக ஆட்சியமைக்க மறுத்துள்ள நிலையில், சிவ சேனாவினை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார் மஹாராஷ்டிரா ஆளுநர் திரு. பகத் சிங். இதனையடுத்து, என்ஆர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவினை எதிர்பார்த்து இருக்கின்றது சிவசேனா.

இந்நிலையில், இன்று மதியம் 2.30 மணியளவில், சிவசேனா கட்சியினர். ஆளுநரை சந்திக்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் துறையின் அமைச்சருமான அரவிந்த் சாவந்த், சிவ சேனா உண்னையின் பக்கம் உள்ளது.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில், நான் ஏன் மத்திய அரசில் அங்கம் வகிக்க வேண்டும். இன்று காலை நான் பதவி விலகுகிறேன். விரைவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேச உள்ளேன் எனக் கூறியுள்ளார்.

ஒரு வேளை, ஆளும் அரசின் பிடியில் இருந்து, சிவ சேனா விலகினால் மஹாராஷ்டிராவில் ஆட்சியமைக்க, சிவ சேனாவிற்கு காங்கிரஸ் ஆதரவு தரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS