இன்று மும்பையில் கூட்டணிக் குறித்து பேச்சுவார்த்த! டிசம்பர் முதல் வாரத்தில் ஆட்சி!

20 November 2019 அரசியல்
shivsena.jpg

இன்று மும்பையில், மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

மஹராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து, அகமது பட்டேல், மல்லிகார்ஜூர்ன் கார்கே, ஏகே ஆண்டனி மற்றும் கேசி வேணுகோபால் ஆகியோரிடம் ஆலோசனை நடத்திய சோனியா காந்தி, இன்று மும்பையில் நடைபெறும் கூட்டத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், இன்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே, அக்கட்சி எம்எல்ஏ மற்றும் எம்பிக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வரும் டிசம்பர் மாதம் முதல் வாரம் சிவசேனா ஆட்சி அமைக்கும் என, அக்கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான சஞ்சய் ராவத் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS