கை தட்டுவதாலும், விளக்கு ஏற்றுவதாலும் கொரோனா போகாது!

09 April 2020 அரசியல்
shivsena.jpg

பானிபட் போரில் தோற்றது போல, இந்த கொரோனாவிற்கு எதிரானப் போரில் தோற்றுவிடக் கூடாது என சிவசேனாவின் செய்தித் தாளான சாம்னா செய்தி வெளியிட்டுள்ளது.

சிவசேனா கட்சியின் செய்தித்தாளான சாம்னாவில், இன்று காலையில் செய்தி குறிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதில் வந்த செய்தி பின்வருமாறு: கை தட்டுவதாலும், விளக்கு ஏற்றுவதாலும் கொரோனா வைரஸை வெல்ல இயலாது. பொதுமக்களிடம், பிரதமர் விளக்கமாக கூறியிருக்க வேண்டும் அல்லது பொதுமக்கள் அவர் கூறியதனைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால், அவ்வாறே இருக்கட்டும் என்று, அவர்கள் நினைத்திருக்க வேண்டும்.

எது எப்படி இருப்பினும், நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பானிபட் போரில் இப்படித் தான் தோற்றுப் போனோம். அதைப் போல், நாம் இதில் தோற்று விடக் கூடாது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே போன்றவர்கள் தான், நமக்கு தளபதிகளாக இருந்து செயல்பட முடியும். மராட்டியத் தளபதி சதாசிவ் ராவ் பாவிற்கு ஏற்பட்ட முடிவானது, நமக்கு ஏற்பட்டு விடக் கூடாது.

மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே தான், பொதுமக்களிடம் சுய ஒழுக்கத்தினை கூறி வருகின்றார். டெல்லி மாநாட்டினைக் குறை கூறுபவர்கள், சுய ஒழுக்கத்தினையும், சமூக இடைவெளியினையும் பின்பற்றுகின்றார்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

HOT NEWS