சிவ சேனாவில் இருந்து தான் முதல்வர்! சஞ்சய் ராவத் அதிரடி!

05 November 2019 அரசியல்
shivsena.jpg

மஹாராஷ்டிராவிற்கு முதல்வர் வந்தால், அவர் சிவ சேனா கட்சியில் இருந்து தான் வருவார் என, சிவசேனாக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

நேற்று மாலையில், மஹாராஷ்டிரா ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ராவத் கூறுகையில், மஹாராஷ்டிராவிற்கு முதல்வர் வந்தால், அவர் சிவ சேனா கட்சியில் இருந்து தான் வருவார் என்றுக் கூறினார். மேலும் அவர் கூறுகையில், சிவ சேனாக் கட்சிக்கு தேவையான பெரும்பான்மை ஆதரவு தங்களுக்கு உள்ளது எனவும் கூறினார். சுயேட்சை எம்எல்ஏக்களும், எதிர் கட்சி எம்எல்ஏக்களும் சிவ சேனா ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளனர் எனவும் கூறினார்.

வரும் நவம்பர் 9ம் தேதிக்குள் ஆட்சியமைக்காவிட்டால், மஹாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமையும். தேர்தல் முடிவானது 12 நாட்கள் ஆன நிலையில், பாஜகவும் சிவசேனாவும் ஆட்சி அமைப்பதில் மோதி வருகின்றன. பாஜக சார்பில் முதலமைச்சர் பதவி யாருக்கும் தரப்படமாட்டாது எனவும், மேலும், சிவ சேனாவிற்கு அமைச்சர் பதவி தரப்படும் எனவும் கூறப்பட்டு வருகின்றது. ஆனால், வந்தால் முதலமைச்சராகத் தான் வருவேன் எனக் கூறி ஒற்றைக் காலில் நிற்கின்றது சிவ சேனா.

HOT NEWS