எஸ் ஐ வில்சன் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், சமீம் மற்றும் தவுபிக் ஆகியோர் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள இந்திராண இரயில் நிலையத்தில், சுற்றி வளைத்து கைது செய்யப்பட்ட சமீம் மற்றும் தவுபிக் ஆகியோர், தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை தமிழகம் அழைத்து வந்த போலீசார், களியக்காவிளை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர், அங்கு அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு உண்ண உணவும் வழங்கப்பட்டது.
அவர்களிடம், எட்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவர் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். போலீஸ் விசாரணைக்கு அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், வருகின்ற 20ம் தேதி வரை, குற்றவாளிகளை பாளையங்கோட்டை சிறையில் வைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, தீவிரவாதிகள் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.