சிம்பிளிசிட்டி வலைதள ஆசிரியர் கைது! தலைவர்கள் கண்டனம்!

25 April 2020 அரசியல்
newspaper.jpg

கோவையை மையமாகக் கொண்டு செயல்படும், சிம்பிளிசிட்டி வலைதளத்தின் ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார். இதற்கு, திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களுடைய கண்டனத்தினைத் தெரிவித்து உள்ளனர்.

கோயம்புத்தூரில் உள்ள மருத்துவமனைகளில், சரியான அன்றாட வசதிகள் செய்து தரப்படவில்லை என்று செய்தி வெளியிடப்பட்டது. கடந்த ஏப்ரல் 14ம் தேதி அன்று, இந்த செய்தி வெளியிடப்பட்டது. மேலும், அங்கு படிக்கின்ற மருத்துவ மாணவர்களுக்கு முறையான உணவு வசதி செய்து தரப்படவில்லை என்று செய்தி வெளியிடப்பட்டது.

அதுமட்டுமின்றி ஏப்ரல் 17ம் தேதி அன்று, பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை உள்ளிட்டவைகளில் முறைகேடு நடப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சியின் உதவி ஆணையளராக பணியாற்றும் சுந்தர்ராஜன் போலீசில் புகார் தெரிவித்தார்.

அவருடையப் புகாரில், பொய்யான செய்தியினைப் பரப்பி, ஊழியர்களைப் போராடத் தூண்டும் விதத்தில் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருவதாக கூறியுள்ளார். அதனால், அதன் நிறுவனர் மற்றும் ஆசிரியரான ஆண்ட்ரூஸ் சாம் என்பவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து, போலீசார் சாம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் அமமுக தலைவர் தினகரன் உள்ளிட்டோர் தங்களுடையக் கண்டனத்தினைத் தெரிவித்துள்ளனர்.

HOT NEWS