இனி பெண் இருக்கைகளில் அமர்ந்தால் அபராதம்! இது என்னடா கொடுமையா இருக்கு!

30 January 2020 அரசியல்
naveenpatnaik.jpg

இனி பெண்கள் அமரும் பேருந்து இருக்கைகளில் அமர்ந்தால், அபராதம் விதிக்கப்படும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில், பெண்கள் அதிகளவில் பேருந்துகளில் பாலியல் தொந்தரவுகளை சந்திப்பதாகவும், போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதனையடுத்து, பிஜூ ஜனதா தளம் ஆட்சி நடத்தும் அரசு அதிரடி முடிவினை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இனி யாராவது ஒடிசா மாநிலத்தில், பேருந்துகளில் பயணிக்கும் பொழுது பெண்கள் இருக்கையில் அமர்ந்தால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால், பெண்கள் தங்களுடைய இருக்கையில், நிம்மதியாக அமர்ந்து பயணிக்கு இயலும் என நம்பப்படுகின்றது.

HOT NEWS