சிவன்மலைக் கோயிலில் தாலிக் கயிறு பூஜை! பக்தர்கள் பீதி!

30 January 2020 அரசியல்
sivanmalaipetti.jpg

சிவன்மலையில் உள்ள கோயில் பெட்டியில், தாலிக் கயிறு வைக்கப்பட்டு உள்ளது.

இந்தக் கோயிலில் உள்ள பெட்டியில், எதை வைத்து வழிபட்டாலும், அது சம்பந்தமாக விஷயங்கள் நடைபெறும் என்பது நம்பிக்கை. அந்த கோயிலின் கடவுள், பக்தர்களின் கனவில் வருவார். அவர் கூறுவதை கொண்டு சென்று, அங்குள்ள பெட்டியில் வைப்பர். இந்தப் பெட்டிக்கு ஆண்டவர் உத்தரவு பெட்டி என்று பெயர்.

இந்த ஆண்டவர் பெட்டியினைப் பற்றியும், உலகம் அழிவது பற்றியும் சித்தர்கள் கூறியிருக்கின்றனர். இந்தப் பெட்டிக்கென அப்பகுதியில், மாபெரும் மரியாதை உண்டு. இந்த கோயிலுக்கு, திருப்புகழ் இயற்றிய அருணகிரிநாதர் வந்து பாடியுள்ளார். அந்த அளவிற்கு இந்தக் கோயில், புகழ் பெற்றது.

இந்தக் கோயிலில் உள்ள ஆண்டவர் பெட்டியில், மஞ்சள் துண்டுடன் கூடிய தாலிக் கயிற்றினை வைக்க வேண்டும் என, காமராஜர் நகர் பகுதியில் வசித்து வரும் காமராஜர் என்பவர் கனவில் ஆண்டவர் வந்ததாகவும், அவர் உத்தரவுப் படி தற்பொழுது பெட்டிக்குள், தாலிக் கயிறு வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

HOT NEWS