இந்திய உச்சநீதிமன்றத்தினைச் சேர்ந்த ஆறு நீதிபதிகளுக்கு, பன்றிக் காய்ச்சல் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆறு நீதிபதிகளும், தற்பொழுது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான பாப்டேவினை சந்தித்து, நிலைமையினை விளக்கி உள்ளனர். மேலும், உயர்தர சிகிச்சைக்காக உதவி செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை, எப்பொழுதும் இல்லாத அளவிற்கு, ஒரே நேரத்தில், இத்தனை நீதிபதிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மத்திய அரசு இவர்களுக்கான மருத்துவ சிகிச்சையினை வழங்க முடிவு செய்துள்ளது.