பழனியில் பயங்கரம்! வீடு கடைகளுக்கு முன் மண்டை ஓடு!

08 August 2020 அரசியல்
humanskullpalani.jpg

பழனியில் வசித்து வருபவர்களின் வீடுகள் மற்றும் கடைகள் முன்பு, மண்டை ஓடுகளும் மனித எலும்புகளும் சிதறிக் கிடந்ததால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

பழனியில் உள்ள தேவங்கர் என்றத் தெருவில், பொதுமக்கள் இரவு நேரங்களில் பெருமளவில் புலங்குவதில்லை. அந்தத் தெருவில் வழக்கம் போல் பொதுமக்கள் இரவில் உறங்கிவிட்டு, காலையில் எழுந்து பார்க்கும் பொழுது வீடுகளுக்கு முன்பும், கடைகளுக்கு முன்பும் மண்டை ஓடுகள் கிடந்தன. இதனால், அப்பகுதியில் வசித்து வருகின்ற பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, போலீசார் அப்பகுதிக்கு வந்து விசாரிக்கத் தொடங்கினர். அதில், அப்பகுதி இளைஞர்கள் குடித்துவிட்டு போதையில் இவ்வாறு செய்திருக்கலாம் என்றுக் கருதுகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS