இந்தியாவின் ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
ஹரியானாவின் ரோஹ்தக் பகுதியில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பதற்றம் அடைந்தனர். இருப்பினும், பெரிய அளவில் இல்லாமல் இருந்ததால், அமைதியாக வீட்டிலேயே இருந்தனர். இருப்பினும், இடைவெளி விட்டு தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்ட காரணத்தினால், பொதுமக்கள் சாலைகளுக்கு வந்தனர்.
இந்த அதிர்வானது, ரிக்டர் அளவுகோலில் சுமார் 4.6 என பதிவாகி உள்ளது. தொடர்ந்து இந்த நில அதிர்வுகளின் காரணமாக, பொதுமக்கள் மீண்டும் காலையில் தான் வீடுகளுக்குத் திரும்பினர். இரவு முழுக்க வீதிகளிலேயே இருந்தனர். டெல்லி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது. இருப்பினும், பெரிய அளவில் ஏற்படாத காரணத்தால், பொதுமக்கள் நிம்மதியாகவே இருந்தனர்.