திகார் சிறையில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான திரு ப.சிதம்பரத்தை, காங்கிரஸ் கட்சியின் இடைக் காலத் தலைவர் திருமதி. சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர், சந்தித்துப் பேசினர்.
இது குறித்து டிவீட் செய்துள்ள ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சியைப் போலவே, நானும் தைரியமாகவும், உறுதியாகவும் இருப்பேன் எனக் கூறியுள்ளார்.
மேலும் ஹோவ்டி மோடி பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ள ப.சிதம்பரம், இந்தியாவில் எல்லாமே சிறப்பாக உள்ளது எனவும், ஆனால், வேலைவாய்ப்பின்மை, வேலையிழப்புகள், குறைவான சம்பளம், அடக்குமுறை மற்றும் காஷ்மீர் பிரச்சனை அதோடு எதிர்கட்சிக்காரர்களை சிறையில் அடைப்பது தவிர, எனவும் கூறியுள்ளார்.
இவர் தற்பொழுது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.