தீவிரமடைந்தது தென்மேற்குப் பருவமழை! இங்கெல்லாம் ரெட் அலர்ட்!

26 June 2020 அரசியல்
rainmonsoon1.jpg

தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழையானது தீவிரமடைந்து உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

தென் இந்தியாவிற்கு அதிகளவில் மழைப்பொழிவினை வழங்குவது தென் மேற்கு பருவமழை ஆகும். இது தற்பொழுது தொடங்கி உள்ளது. இதனால், தமிழகம், கேரளா, ஆந்திரா, மஹாராஷ்டிரா மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்து வருகின்றது. இந்த சூழ்நிலையில், இந்த பருவமழைத் தீவிரம் அடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடியக் கனமழைப் பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக, அது தெரிவித்துள்ளது. நேற்று, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் தமிழகத்தில் மழை பெய்தது. இந்த சூழ்நிலையில், கேரளா, மஹாராஷ்டிரா மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. தென் கிழக்கு அரபிக்கடலுக்குள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

HOT NEWS