தீபாவளி சிறப்புப் பேருந்துகள்! நாளை மறுநாள் முதல் இயக்கம்!

22 October 2019 அரசியல்
tnstc.jpg

வரும் ஞாயிறு அன்று, தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, இந்தியா முழுவதும் தயாராகி வருகிறது. குறிப்பாக, தமிழகம் மிகச் சிறப்பாக தயாராகி வருகின்றது.

பொதுமக்கள், தங்களுடைய சொந்த ஊருக்காக செல்வார்கள் என்ற காரணத்திற்காகவும், தனியார் பஸ்களின் கட்டணக் கொள்ளையைத் தடுக்கும் பொருட்டும், தமிழகம் சார்பில் வருடந்தோறும் ஆயிரக்கணக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டும், சுமார் 10,000க்கும் அதிகமானப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதனை சுகாதாரத் துறை அமைச்சர். எம்.எஸ்.விஜயபாஸ்கர் துவக்கி வைக்க உள்ளார். சென்னையில் மட்டும் சுமார், 30 பேருந்து முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், தமிழகத்தின் பல்வேறுப் பகுதிகளிலும் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. வரும் 24ம் தேதி முதல், பேருந்து முன்பதிவு ஆரம்பமாக உள்ளது.

திங்கட்கிழமையும் அரசு விடுமுறை என்பதால், அன்றும் இந்த வாகனங்கள் இயக்கப்பட உள்ளன.

HOT NEWS