பள்ளி மாணவர்கள் எங்களுக்கு மிகவும் முக்கியம்! செங்கோட்டையன் பேச்சு!

29 May 2020 அரசியல்
sengottaiyan1.jpg

பள்ளி மாணவர்களே எங்களுக்கு முக்கியம் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் செங்கோட்டையன். அவர் பேசுகையில், ஆன்லைன் மூலம் படிப்பது பற்றிக் குழப்பம் வேண்டாம். ஆன்லைன் மூலம், படிப்பதற்கு எவ்விதக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்பதையே கூறியுள்ளோம். ஆன்லைனில் படிக்கவோ, பாடம் எடுக்கவோ பிரச்சனைகள் கிடையாது.

தமிழகத்தின் பலத்துறையில் இருப்பவர்களுடன் ஆலோசனை நடத்தியப் பிறகே, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்விற்கான அட்டவணை வெளியாகி உள்ளது. மாணவர்கள் படித்த பள்ளிகளிலேயே பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இற்காக மொத்தம், 12,864 மையங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. மாணவர்கள் பயப்பட தேவையில்லை.

தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது. எங்கள் உயிரை விட, மாணவர்களின் உயிரே முக்கியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

HOT NEWS