சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி! ஆயுதங்களை பலமடங்காக்கிய இந்தியா!

06 October 2020 அரசியல்
missilelaunch.jpg

இந்தியாவின் டிஆர்டிஓ நடத்திய சோதனையில், சூப்பர்சோனிக் ஏவுகணையானது வெற்றி பெற்று உள்ளது.

கடந்த வாரத்திற்குள் இரண்டாவது ஏவுகணையின் இந்தியாவின் டிஆர்டிஓ அமைப்பானது, செய்துள்ளது. அவை இரண்டுமே வெற்றி பெற்று உள்ளன. கடந்த வாரத்தின் தொடக்கத்தில் சௌரியா ஏவுகணை சோதனையானது வெற்றி பெற்றது. இந்த நிலையில், ஓடிசாவின் வீலர் தீவில் உள்ள சோதனை மையத்தில், சூப்பர்சோனிக் ஏவுகணையானது சோதிக்கப்பட்டது.

ஸ்மார்ட் (SMART) எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி, இந்த ஏவுகணையானது பரிசோதிக்கப்பட்டது. இது சரியான நேரத்தில், தன்னுடைய இலக்கினைத் துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளது. இதனால், இந்த சோதனையானது வெற்றி பெற்று உள்ளதாக, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை டிஆர்டிஓ அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தன்னுடையப் பாராட்டினை தெரிவித்து உள்ளார்.

HOT NEWS